Advertisment

புதிய ரூ.50 நோட்டு வெளியாகிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

ரிசர்வ் வங்கி புதிய ரூ.50 நோட்டுகளை விரைவில் வெளியிடவுள்ளது என்ற அறிவிப்புடன், அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
புதிய ரூ.50 நோட்டு வெளியாகிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

ரிசர்வ் வங்கி புதிய ரூ.50 நோட்டுகளை விரைவில் வெளியிடவுள்ளது என்ற அறிவிப்புடன், அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. தொலைக்காட்சி மூலம் அன்றைய தினம் இரவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. அதேபோல், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, அஞ்சலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கொடுத்து அதனை செல்லத்தக்க புதிய ரூபாய் நோட்டுகளாக, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை மாற்றிக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஒரு சாரார் புகழ்ந்தாலும், பல்வேறு தரப்பினர் தங்களது கடும் எதிர்ப்பை இன்றளவும் தெரிவித்து வருகின்றனர்.

அதிக மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டதால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

இதனிடையே, புதிய ரூ.200 நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் எனவும், அதனை அச்சிடுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாவும் ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. அதனையடுத்து, புதிய ரூ.20 நோட்டுகளும் விரைவில் புழக்கத்துக்கு வரும் என அறிவித்த ரிசர்வ் வங்கி, பழைய ரூ.20 நோட்டுகள் செல்லத்தக்க நோட்டுகளாகவே தொடரும் எனவும் தெரிவித்தது.

மேலும், சில்லறைத் தட்டுப்பாட்டை தவிர்க்கும் விதத்தில், ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 ஆகிய குறைந்த மதிப்பிலான நோட்டுகளை அச்சடிக்கும் பணியில் ரிசர்வ் வங்கி தற்போது கவனம் செலுத்தி வருகிறது என ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி புதிய ரூ.50 நோட்டுகளை விரைவில் வெளியிடவுள்ளது என்ற அறிவிப்புடன், அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, ரூ.200 தொடர்பான புகைப்படங்களும் இதேபோன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதனையடுத்து, அந்த மதிப்பிலான நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதேபோல், தற்போது புதிய ரூ.50 நோட்டு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே, இந்த நோட்டும் விரைவில் புழக்கத்துக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment