Advertisment

முத்தலாக்கை ரத்து செய்தோம், ஹஜ் கோட்டா அதிகரித்துள்ளோம்; அலிகார் பேரணியில் மோடி பேச்சு

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி போன்ற கட்சிகள் எப்போதுமே சமாதான அரசியலையே விளையாடின, முஸ்லிம்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக எதையும் செய்யவில்லை; அலிகார் கூட்டத்தில் மோடி பேச்சு

author-image
WebDesk
New Update
Modi Aligarh

லோக்சபா தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். (பி.டி.ஐ)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இன்று நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “முத்தலாக் சட்டத்தை மோடி இயற்றியதன் மூலம் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: In Aligarh, PM Modi's Muslim outreach: 'Ended triple talaq, increased Haj quota'

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி திங்கள்கிழமை பேசுகையில், "நாட்டை வம்ச அரசியலில் இருந்து விடுவிக்கும் நேரம் வந்துவிட்டது. கடந்த முறை நான் அலிகாருக்கு வந்தபோது, சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸின் உறவுமுறை, ஊழல் மற்றும் திருப்திப்படுத்தும் தொழிற்சாலைக்கு பூட்டு போடுமாறு கேட்டுக் கொண்டேன். இளவரசர்கள் இருவராலும் இன்றுவரை சாவியைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் பலமான பூட்டைப் போட்டுவிட்டீர்கள்.

முன்னதாக, எல்லையில் தினமும் வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் வீசப்பட்டன. நமது வீரமிக்க மகன்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் உடல்கள் மூவர்ணக்கொடி போர்த்தப்பட்டு வீட்டிற்கு வந்தன. இன்று இவை அனைத்தும் நின்றுவிட்டன. 

முன்பு பயங்கரவாதிகள் நமது பகுதிகளில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர், தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. அயோத்தியும் விடப்படவில்லை, காசியும் விடப்படவில்லை, ஒவ்வொரு பெரிய நகரத்திலும் குண்டுவெடிப்புகள் நடந்தன. இப்போது தொடர் குண்டுவெடிப்புகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

முன்பு, 370வது பிரிவின் பெயரில், பிரிவினைவாதிகள் காஷ்மீரில் பெருமையாக வாழ்ந்து, நம் ராணுவ வீரர்கள் மீது கல்லெறிந்தனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அலிகாரிலும் தினமும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. அலிகார் வருவதற்கு முன், கலவரம் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக இந்த பகுதிகளில் திருமணம் நடக்கவில்லையா என்று மக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்க வேண்டியிருந்தது.

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி போன்ற கட்சிகள் எப்போதுமே சமாதான அரசியலையே விளையாடின, முஸ்லிம்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக எதையும் செய்யவில்லை.

முஸ்லீம் பெண்களின் வாழ்க்கை முத்தலாக் காரணமாக சீரழிந்தது. முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றி அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளித்துள்ளோம்.

முன்பு, ஹஜ் கோட்டா குறைவாக இருந்ததால், சண்டைகள், லஞ்சம் அதிகமாக இருந்ததால், செல்வாக்கு மிக்கவர்கள் மட்டுமே ஹஜ் செல்ல வாய்ப்பு கிடைத்தது. நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரிடம் நான் கோரிக்கை விடுத்திருந்தேன். இன்று ஹஜ் கோட்டா அதிகரித்திருப்பது மட்டுமின்றி விசா விதிமுறைகளும் எளிதாகிவிட்டன. முன்பு முஸ்லிம் தாய்மார்கள், சகோதரிகள் தனியாக ஹஜ் செல்ல முடியாது. மெஹ்ரம் இல்லாமல் பெண்கள் ஹஜ் செல்ல எங்கள் அரசு அனுமதித்தது. ஆயிரக்கணக்கான சகோதரிகளின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்துள்ளது. ஹஜ் செல்ல வேண்டும் என்ற அவர்களது கனவு நனவாகியுள்ளது.

இன்று அலிகார் மற்றும் ஹத்ராஸ் குடும்பங்களுக்கு ரேஷன், இலவச சிகிச்சை மற்றும் வீட்டு வசதிகள் கிடைத்துள்ளன. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவருக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்பது மோடியின் உத்தரவாதம். உங்கள் ஒரு வாக்கினால் இவை அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

அலிகாரில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் மட்டுமே இருந்தது, இப்போது ராஜா மகேந்திர பிரதாப் பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைய உள்ளது.

காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் உங்களின் சம்பாத்தியம் மற்றும் சொத்துக்களை உற்று நோக்குகின்றன. யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார்கள், எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள், எத்தனை வீடுகள் வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று காங்கிரஸ் இளவரசர் கூறுகிறார். இந்தச் சொத்தை அரசு உடைமையாக்கி, அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம் என்று கூறுகிறார்.

எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் தங்கம் உள்ளது. இது பெண்கள் சொத்து, இது புனிதமாக கருதப்படுகிறது, சட்டமும் இதைப் பாதுகாக்கிறது. எதிர்கட்சிகளின் கண்கள் உங்கள் மங்களசூத்திரத்தை குறிவைக்கின்றன.

இது மாவோயிஸ்ட் சிந்தனை, இது இடதுசாரி சிந்தனை. இப்படிச் செய்து பல நாடுகளை நாசமாக்கிவிட்டார்கள். காங்கிரஸும் இந்தியக் கூட்டணியும் இந்தக் கொள்கையை இந்தியாவில் அமல்படுத்த விரும்புகின்றன.

புல்டோசர் மூலம் யோகியை அடையாளம் காட்டுபவர்களின் கண்களைத் திறக்க விரும்புகிறேன், சுதந்திரத்துக்குப் பிறகு உ.பி.யில் நடக்காத தொழில் வளர்ச்சி யோகிஜியின் (உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்) ஆட்சியில் நடந்துள்ளது.

அலிகரின் பூட்டுகள், ஹத்ராஸின் ஹீங், உலோகத் தொழில், குலால் தொழில், பா.ஜ.க ஒவ்வொரு தொழிலின் பலத்தையும் அதிகரித்து வருகிறது. 13000 கோடியில் சிறப்பு பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தை உருவாக்கியுள்ளோம். 

500 ஆண்டுகளுக்குப் பிறகு பிரமாண்ட ராமர் கோவிலை பார்க்கிறோம் என்பது பெருமைக்குரிய விஷயம். மேலும் ராமர் கோவில் என்றால் எதிர்கட்சிகள் தூக்கத்தை இழக்கிறார்கள். 70 ஆண்டுகளாக அதைத் தடுத்து வைத்திருந்தார்கள். இந்த கோபத்தில் தான் ராமர் கோவில் அழைப்பை நிராகரித்தனர்.” இவ்வாறு மோடி உரையாற்றினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Pm Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment