Advertisment

குஜராத் சட்டமன்ற தேர்தல் 2017: முதல் அமைச்சர் விஜய் ரூபனியின் சொத்து 21 சதவீதமாக உயர்வு

வேட்புமனுவில் 9.09 கோடி ரூபாய் சொத்துள்ளது என்ற விபரத்தையும் இணைத்துள்ளார். 2014ல் இருந்து 2017ம் ஆண்டுக்குள் 21 சதவீதமாக சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay-rupania

குஜராத் முதல் அமைச்சர் விஜய் ரூபனி திங்கள் அன்று ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுவில் 9.09 கோடி ரூபாய் சொத்துள்ளது என்ற விபரத்தையும் இணைத்துள்ளார். 2014ல் இருந்து 2017ம் ஆண்டுக்குள் 21 சதவீதமாக சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இந்த தொகுதியில் அவரை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் இந்திரானில் ராஜ்யகுரூர் போட்டியிடுகிறார். அவரது சொத்தும் 2012ல் இருந்து 15 சதவிதமாக விருத்தி அடைந்துள்ளது.

Advertisment

ராஜ்கோட் தொகுதியின் முக்கிய நீர் ஆதாரமான அஜி அணையை பார்வையிட்டு தனது பிரசாரத்தை திடங்கினார், முதல் அமைச்சர் ரூபனி. அதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனை நடத்தும் ரான்ச்சோத் தாஸ் ஆஷ்ரமத்திற்கு சென்றார். அதன் பின் முதல் அமைச்சர் அவரது மனைவியுடன் சோனி பஜாரில் உள்ள ஜெயின் கோயிலிக்கு சென்று வழிபட்டார்.

மேலும் பஹுமளி பஹ்வனில் பொது கூட்டத்தில் மக்களை சந்திக்கும் முன் சுவாமிநாராயண கோயில், பாலாஜி கோயில் மற்றும் பஞ்ச்நாத் மகாதேவ் கோயிலை வலம் வந்தார். அதன் பின் பொது கூட்டத்தில் பேசிய அவர் தங்கள் வளர்ச்சியை கேலி செய்யும் காங்கிரசை கண்டித்துப் பேசினார்.

“நாங்கள் வளரும் அரசியலில் போட்டியிடுகிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த மூன்று வருட ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் வலு இழந்து 20க்கு மேற்பட்ட தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் காங்கிரஸ் எங்களை பார்த்து பயந்து நடுங்குகிறது. அதனால்தான் எங்களின் வளர்ச்சியை கேலி செய்கிறது’’ என பேசினார்.

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment