Advertisment

கேரளாவில் இன்று முழு அடைப்பு: தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்

ஆர் எஸ்எஸ் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
கேரளாவில் இன்று முழு அடைப்பு: தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்

ஆர் எஸ்எஸ் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Advertisment

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(33). ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியான அவர், கடந்த சனிக்கிழமையன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு சென்றனர்.

இடது கை துண்டாக வெட்டப்பட்ட நிலையில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆர் எஸ்எஸ் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, இன்று காலை முதல் அம்மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் அம்மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

Bjp Kerala Rss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment