Advertisment

முன்னாள் பிரதமர் மகன் மீது பாலியல் வழக்குப் பதிவு; யார் இந்த ஹெச்.டி. ரேவண்ணா?

H D Revanna booked in sexual harassment case | முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மகன் ஹெச்.டி. ரேவண்ணா மீது பாலியல் புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெச்.டி ரேவண்ணா முன்னாள் அமைச்சர் ஆவார்.

author-image
WebDesk
New Update
Former minister H D Revanna booked in sexual harassment stalking case

ஹெச். டி ரேவண்ணா மீது பாலியல் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான ஹெச்.டி.ரேவண்ணா மற்றும் அவரது பேரனும், ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28,2024) பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இவர்களது சமையல்காரர் அளித்த புகாரின் பேரில் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் ஆணையத்தின் தலைவி டாக்டர் நாகலட்சுமி சவுத்ரி அரசுக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, பிரஜ்வல் சம்பந்தப்பட்ட பாலியல் முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை கர்நாடக அரசு இன்று அமைத்துள்ளது.

33 வயதான பிரஜ்வல் ஹாசன் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக உள்ளார். இந்த மக்களவை தொகுதியில் ஏப்.26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 

மதசார்பற்ற ஜனதா தளம் (JD(S) கடந்த ஆண்டு செப்டம்பரில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தது நினைவு கூரத்தக்கது.

ஆங்கிலத்தில் வாசிக்க : Former minister H D Revanna booked in sexual harassment, stalking case

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment