Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணை-I | வெடி குண்டுகளால் கொல்லப்பட்ட குழந்தைகள்: வங்கத்தில் குற்றம் குடிசைத் தொழில்?

மேற்கு வங்கத்தில் நிகழும் வன்முறை சம்பவங்களில் வீசப்படும், பதுக்கப்படும் நாட்டு வெடிகுண்டுகளால் பல குழந்தைகளின் உயிர்கள், வாழ்வாதாரங்கள் பறிபோய் உள்ளன.

author-image
WebDesk
New Update
Express Investigation-Part I All these kids were killed by bombs meet the casualties of Bengals crime cottage industry

(மேலே, இடமிருந்து) ஷேக் அப்ரோஸ் (7), நிகில் பாஸ்வான் (8), ஷேக் நசிருல் (11), இம்ரான் ஷேக் (6) மற்றும் நஜ்மா (6) ஆகியோர் வெடிகுண்டுகளை விளையாட்டுப் பொருள்களாக தவறாகக் கருதியதால் வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்டனர்.

மேற்கு வங்கத்தின் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கன்கினாராவில் உள்ள தனது ஒற்றை அறை வாடகை வீட்டில் இரும்புக் கட்டிலில் அமர்ந்து இருந்தார் 11 வயதான மகேஷ் ஷா.

Advertisment

அவரது ஒரு கை துண்டிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரயில் தண்டவாளத்தில் கிடந்த பொருள் ஒன்றை தனது 8 வயதான நண்பர் நிகிலும் எடுத்தார்.

கையில் இருப்பது வெடிகுண்டு என அறியாத நிலையில் அது வெடித்துச் சிதறியது. இதில் நிகில் பாஸ்வான் பரிதாபமாக உயிர் இழந்தார். மகேஷின் ஒரு கை வெடித்துச் சிதறியது.

மகேஷ் மற்றும் நிகில் மேற்கு வங்கம் முழுவதும் கச்சா வெடிகுண்டுகளால் ஊனமுற்ற அல்லது கொல்லப்பட்ட பல குழந்தைகளில் இருவர் ஆவார்கள். அவர்கள் வெடிகுண்டை விளையாட்டுப் பொருள்கள் என்று தவறாகக் கருதினர்.

இது, ரிணாமுல் காங்கிரஸுக்கும் அதன் அரசியல் போட்டியாளர்களுக்கும் இடையிலான வன்முறைப் போர் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில் 2018ஆம் ஆண்டுக்குள் 224 பேர் வன்முறைகளில் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர் என பாரதிய ஜனதாவும் கடந்த 2 ஆண்டுகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூறிவருகிறது. இதனை அரசியல் பரப்புரை என திரிணாமுல் காங்கிரஸ் நிராகரிக்கிறது.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட இந்தக் குழந்தைகள் பற்றியும் சிலர் பேசுகிறார்கள். ஏனெனில், வெடிகுண்டுகள் தயாரிப்பது இப்போது ஒரு உண்மையான குடிசைத் தொழிலாக உள்ளது.

தற்காலிகப் பட்டறைகள் மாநிலம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்டு செயல்படுகின்றன.

இந்த வார தொடக்கத்தில் பாஜகவின் மாநிலப் பிரிவு, ஒன்பது பேரைக் கொன்ற பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையை நாடினர்.

முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய ஏஜென்சி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதில் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பதிலடி கொடுத்த நிலையில், அங்கு கச்சா வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக அக்கட்சி கூறியது.

போலீஸ் பதிவுகளை விசாரித்து, உயிர் பிழைத்தவர்களின் குடும்பங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளை நேர்காணல் செய்த தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 2021 மற்றும் 2022 க்கு இடையில் ஐந்து மாவட்டங்களில் (பர்த்வான், பிர்பூம், மால்டா, வடக்கு மற்றும் தெற்கு 24. பர்கானாஸ்.) ஆறு குழந்தைகளின் உயிரை இழந்த 24 குடும்பங்களையும், படுகாயமடைந்த 18 பேரையும் கண்டுபிடித்தது.

வடக்கு 24 பர்கானாஸ்

மகேஷ் ஷாவின் பெற்றோர், “எங்களின் குழந்தைகளை எப்படி தனியாக விடுவோம். அவனால் குளிக்க கூட முடியாது. அன்றாட வாழ்க்கைக்கே சிரமப்படுகிறான்” என்றார்கள்.

இது குறித்து மகேஷ் ஷா கூறுகையில், “தீபாவளிக்குப் பிறகு ஒரு நாள். நானும் நிகிலும் ரயில் தண்டவாளம் அருகே உள்ள மைதானத்தில் விளையாடச் சென்றோம். நாங்கள் இரண்டு சிறிய உலோகப் பெட்டிகளைக் கண்டோம், இரண்டும் டேப் செய்யப்பட்டவை.

நிகில் என்னிடம் ஒன்றை நீட்டினான். அதை திறக்க முயன்றபோது வெடி சத்தம் கேட்டது. என் கை உடைந்து நான் ஓடுவதற்குள் நிகில் தரையில் விழுந்ததைக் கண்டேன். சம்பவத்திற்குப் பிறகு, அப்பகுதியில் இருந்து 60 கச்சா குண்டுகளை போலீசார் மீட்டனர்” என்றார்.

இந்நிலையில், "கிட்டத்தட்ட கை துண்டிக்கப்பட்ட நிலையில் மகேஷ் வீட்டிற்கு விரைந்து செல்வதை நாங்கள் பார்த்தோம்," என்று அவரது தந்தை அருண் குமார் ஷா நினைவு கூர்ந்தார்

அவர் படகு மூலம் சம்பாதித்து வருகிறார். இவரது மனைவி உள்ளாடை தொழிற்சாலையில் பணிபுரிகிறார். “என் மகனின் வாழ்க்கை அழிக்கப்பட்டது. உள்ளூர் டிஎம்சி தலைவர்கள் மருத்துவமனை கட்டணத்தை செலுத்தினர், ஆனால் அவரது எதிர்காலத்தை பாதுகாக்க எங்களுக்கு இழப்பீடு தேவை” என்றார்.

நிகிலின் தாய் குசும் பாஸ்வான் (35), இப்போது தனது சகோதரரின் பராமரிப்பில் இருக்கிறார், அவர் வீடு திரும்ப மறுத்துவிட்டார்.

"அந்த பயங்கரத்தை நாங்கள் நினைவுபடுத்த விரும்பவில்லை," என்று குசும் கூறினார். "நீங்கள் சொல்லுங்கள், எங்கள் குழந்தைகளை எப்படி நாள் முழுவதும் வீட்டில் பூட்டி வைப்போம்? விளையாடுவதற்கு இடமில்லாத ஒற்றை அறை அது” என்றார்.

இந்த வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இது பொதுவான சவால் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மகேஷின் வீட்டிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள கர்பலே பகுதியில், டிசம்பர் 7, 2022 அன்று குண்டுவெடிப்பில் இருவர் காயமடைந்ததில் இருந்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை விளையாட விடவில்லை.

இதற்கிடையில், "இது குளிர்ச்சியாக இருந்தது, நாங்கள் ஒரு சிறிய தீயை ஏற்றினோம். ஒரு குப்பை கிடங்கில் இருந்து, ஒரு உருண்டையான பொருளைக் கண்டுபிடித்து, அதை தீயில் எறிந்தோம். ஒரு வெடிப்பு ஏற்பட்டது. எனக்கு கால்களில் காயம் ஏற்பட்டது, எனது நண்பரும் (முகமது அஃப்ரோஸ், 8) படுகாயம் அடைந்தார், ”என்று முகமது வாசிஃப் (15) கூறினார்.

கச்சா வெடிகுண்டு வெடித்த மைதானத்திற்கு அருகில் காந்தி வித்யாலயா என்ற பள்ளியில் 113 மாணவர்கள் முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்தினர்.

“அஃப்ரோஸ் இங்கே ஒரு மாணவர். இந்த சம்பவம் நடந்ததில் இருந்து, மாணவர்களை வெளியில் விளையாட அனுமதிக்கவில்லை. அவர்களின் உயிரை பணயம் வைக்க முடியாது’’ என்கிறார் தலைமை ஆசிரியர் நந்திதா சர்மா.

வழக்கின் நிலை

5 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

அதே மாவட்டத்தில், மூன்றாவது பலியான சோஹானா காதுன் என்ற ஜூமா (10), பக்சோரா கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி சோஹானாவின் மாமாவின் வீட்டின் மொட்டை மாடியில் கிடைத்த உருண்டையான பொருளை எடுத்தபோது அவர் கொல்லப்பட்டார். அவரது தோழி ரஹிமா பர்வின் (10) காயமடைந்தார்.

ரஹீமாவின் தாய் நஜ்மா கூறுகையில், “நானும் எனது கணவரும் தமிழகத்தில் கூலி வேலை செய்து வருகிறோம். என் மகள் தாத்தா பாட்டியுடன் இருந்தாள்” என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ்காரர் என்று உள்ளூர்வாசிகள் கூறும் நஜ்மாவின் மாமா அபு ஹொசைன் கயனை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து உள்ளூர் பஞ்சாயத்து அப்-பிரதான் அப்துல் ஹமீத் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். எங்கள் கட்சிக்காரர்கள் சிலர் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை எங்கள் கட்சி ஆதரிக்காது. எங்கள் பகுதியில் என்ன நடந்தது என்பது பற்றி நாங்கள் ஏற்கனவே எங்கள் தலைமைக்கு விளக்கியுள்ளோம்” என்றார்.

பர்த்வான்

மார்ச் 22, 2021 அன்று, ஏழு வயது ஷேக் அப்ரோஸ் கொல்லப்பட்டார், போலீஸ் மற்றும் அவரது பெற்றோரின் கூற்றுப்படி, அவர் ஒரு பந்து என்று நினைத்து பக்கத்து தோட்டத்தில் சணல் சுற்றப்பட்ட பொருளை எடுத்தார். இந்த குண்டுவெடிப்பில் அவரது நண்பரான ஷேக் இப்ராகிம் (8) காயமடைந்தார்.

இது குறித்து. அப்ரோஸின் தாயார் சானியா பீபி, ““எங்கள் மண் வீட்டில் பயன்படுத்துவதற்கு தோட்டத்தில் இருந்து கொஞ்சம் மண்ணை எடுக்குமாறு என் மகனிடம் கேட்டேன். அவர் வெளியே சென்றார், எனக்கு ஒரு பெரிய சத்தம் கேட்டது. அவரது முகத்தின் ஒரு பகுதியும், கைகளும் அடித்துச் செல்லப்பட்டன. அவர் பர்த்வான் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்” என்றார்.

அப்போது தேர்தல் நேரம், சில மர்ம நபர்கள் அங்கு கச்சா வெடிகுண்டை மறைத்து வைத்திருந்தனர்," என்று அப்ரோஸின் தந்தையும், ஓட்டுநருமான ஷேக் பாப்லு கூறினார்.

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

தெற்கு 24 பர்கானாஸ்

நரேந்திரபூரில் உள்ள அட்கோரா கிராமத்தில், கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி, இன்னும் அடையாளம் தெரியாத இருவர் கச்சா குண்டுகளை வீசியதில், 14 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகள் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

பிர்பூம்

மே 27, 2021 அன்று மாலை தனது தாத்தா ஷேக் ஜமீருடன் கால்வாய் வழியாக நடந்து சென்றபோது, ஷேக் நசிருல் (11) பளபளப்பான உலோகப் பெட்டியைக் கண்டார்.

“நான் ஓடி வந்து அவனைத் தடுக்கும் முன்னரே, அவன் அதை எடுத்தான். அப்போது வெடிவிபத்து ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்” என்று ஜமீர் கூறினார்.

இந்தச் சம்பவத்தில் உள்ளூர் போலீசாரின் துன்புறுத்தலுக்கு பயந்து குடும்பத்தினர் புகார் அளிக்கவில்லை.

இதே மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில், ஆறு வயது நஜ்மா கடந்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தனது வீட்டின் பின்புறம் கண்டெடுக்கப்பட்ட உருண்டையான பொருளை எடுத்ததால் உயிரிழந்தார். இந்த வெடிவிபத்தில் அவரது நண்பர்கள் 4 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில், இம்ரான் தாத்தா ஜாஹிருல் இஸ்லாமை போலீசார் கைது செய்தனர்.

மால்டா

கோபால்நகரில் கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வெடிகுண்டு வெடித்ததில் ஷுவஜித் சாஹா (9), மிதுன் சாஹா (11), போலு சாஹா (6), பிக்ரம் சாஹா (11), ரைஹான் ஷேக் (10) ஆகியோர் உடல் சிதறி காயம் அடைந்தனர்.

மிக மோசமாக பாதிக்கப்பட்டது ஷுவஜித். அவரது தாயார் முக்தி சாஹா (30) கூறுகையில், “அவரது சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டும், யாரும் எங்களுக்கு ஒரு பைசா கூட தரவில்லை” என்றார்.

உள்ளூர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர், அவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் என்று பாஜக குற்றம் சாட்டியது. அந்தக் கூற்றை அக்கட்சி மறுத்தது.

இந்த சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய குழு கோபால்நகர் சென்று விசாரணை நடத்தியது. மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கமிஷன் எங்களிடம் அறிக்கை கேட்டது, அதை நாங்கள் வழங்கினோம். அந்த சம்பவத்தில் நாங்கள் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம்” என்றார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரக்பூர் போலீஸ் கமிஷனரேட்டின் கமிஷனர் அலோக் ரஜோரியாவிடம் பேசியபோது, அவர் நெருக்கடியை ஒப்புக்கொண்டார்.

அதைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரித்தார். தொடர்ந்து, இப்போது நாங்கள் இதை சட்டம் மற்றும் காவல்துறையின் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கவில்லை. பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை எச்சரிக்கும் வகையில் பள்ளிகளிலும், பொது இடங்களிலும் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளோம்.

ரோட்டில் இருந்தும், குப்பையில் இருந்தும் எதையும் தூக்கக்கூடாது என பயிற்சி அளித்து வருகிறோம். எங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Mamata Banerjee West Bengal Tmc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment