Advertisment

சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை... இளைஞர் அடித்தே கொலை செய்யப்பட்ட கொடூரம்!

சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக டெல்லியில் இளைஞர் ஒருவர் அடித்தே கொலை

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Delhi, urinate in public, beaten to death,

சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக டெல்லியில் இளைஞர் ஒருவர் கல்லால் அடித்தே கொலை செய்யப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவர் கல்லால் அடித்தே கொலை செய்யப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஹர்ஸ் விஹார் பகுதியையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சந்தீப் என்பவர் சம்பவ இடத்தில் அமர்ந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவ்வழியே சிலர் சென்றுள்ளனர். அவர்களின் ஒருவர் சந்தீப் அமர்ந்திருந்த இடத்தின் அருகே வந்து சிறுநீர் கழித்ததாகவும், சந்தீப் அணிந்திருந்த உடையில் சிறுநீர் பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த சந்தீப்க்கும், அவர்களுக்கும் இடையே கைலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, சந்தீப் அந்த நபர்களை தாக்கி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதற்கு பழிவாங்கும் வகையில் சந்தீப்பை தனியாக அழைத்துச் சென்ற அவர்கள், கற்களால் அடித்து கொலை செய்துள்ளனர். வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது.

இந்த சம்பவம் முடிந்த நிலையில், அவ்வழியே சந்தீப்பின் சகோதரர் சென்றிருக்கிறார். அவர் அளித்த தகவலின் பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அந்த வழியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்த போது, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள், ராசா, செபு மற்றும் முகீம் என்றும், அவர்கள் அனைவரும் 20 வயதே ஆனவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்த் என்பவர் தலைமறைவாக உள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment