Advertisment

மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் மனு!

மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரியது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் மனு!

மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரியது. லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இதற்கான நோட்டீஸ் வழங்கினார்.

சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க மறுக்கும் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால், அமளி காரணமாக அந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி மக்களவையில் மனு கொடுத்துள்ளது. இதுதொடர்பாக மக்களவை செயலாளருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே அளித்துள்ள கடிதத்தில், மத்திய அரசு மீது பாராளுமன்றத்தில் 27-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment