Advertisment

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படை: மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி!

தமிழக மீனவர்கள், இந்திய கடலோர காவல்படையால் சுடப்பட்ட விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்ய மீனவ நல சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படை: மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி!

இலங்கை மீனவர்கள் என நினைத்து இந்திய கடலோர காவல்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து மனு தாக்கல் செய்ய மீனவ நல சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisment

ராமேஸ்வரத்தில் இருந்து ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அங்கு மீனவர்கள் வலைகளை உலர்த்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த ராணி அபாக்கா கப்பலில் இருந்த கற்படை வீரர்கள், இலங்கை மீனவர்கள் என நினைத்து ரப்பர் குண்டு நிரப்பிய துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பிச்சை படுகாயம் அடைந்துள்ளார். மேலும் ஒரு படகையும் பிடித்து விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. இந்திய கடலோர படையினர் நடத்திய இந்த தாக்குதலால் மீனவர்கள் அச்சமடைந்துள்ள நிலையில், இலங்கை மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிக்க வந்ததாக நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்திய கடலோர காவல் படையினர், ஹிந்தியில் பேசச் சொல்லி எங்களை அடித்தனர். ஹிந்தி தெரியாது என்று கூறிய போதும் அடித்தனர். அதுமட்டுமில்லாமல், ஹிந்தி தெரியாமல் மீன் பிடிக்க வந்தால், சுட்டுக் கொல்வோம் எனவும் மிரட்டினர்" என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள், இந்திய கடலோர காவல்படையால் சுடப்பட்ட விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்ய மீனவ நல சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ள தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

மீனவர் நல சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா இந்த விவகாரத்தை நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரிக்க முறையீடு செய்துள்ளார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment