NDTV இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இணைத் தலைவர் பிரணாய் ராய் வீட்டில் இன்று ரெய்டு நடந்துவருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது. தனியார் வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி பிரணாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய், ஒரு தனியார் நிறுவனம் மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ரூ.48 கோடி வாங்கியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் டெஹ்ராடூன் உள்ளிட்ட நான்கு இடங்களில் இந்த சோதனைகள் நடந்து வருவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
NDTV,-ன் எடிட்டோரியல் இயக்குனர் சோனியா சிங், "விரைவில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.