Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் 3 மாதம் அவகாசம் : உச்சநீதி மன்றத்தில், மத்திய அரசு மனு

சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளபடி செயல்திட்டத்தை ஏற்படுத்த தவறினால், மத்திய அரசு கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news live updates

Tamil Nadu news live updates

காவிரி நீர் தொடர்பான அனைத்து வழக்குகளிலும், கடந்த மாதம் 16-ந் தேதி சுப்ரிம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

Advertisment

கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறி உள்ளது.

நடுவர் மன்றம் தனது இறுதித்தீர்ப்பில் நீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தது. எனவே சுப்ரீம் கோர்ட்டு, இந்த இரண்டு அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான் ‘ஸ்கீம்’ என்று கூறியது என்பது பெரும்பாலானோரின் கருத்து.

இதன் அடிப்படையிலேயே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆனால் கர்நாடக அரசு, “சுப்ரீம் கோர்ட்டு ‘ஸ்கீம்’ ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் கூறியதே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கூறவில்லை” என்கிறது.

மத்திய அரசும் இதுபற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் மே மாதம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் மத்திய அரசு அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள 6 வார ‘கெடு’ கடந்த வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளபடி செயல்திட்டத்தை ஏற்படுத்த தவறினால், மத்திய அரசு கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். எனவே மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறது. இதனால் இந்த பிரச்சினை குறித்து சட்ட அமைச்சகத்திடம், மத்திய அரசு கருத்து கேட்டு இருந்தது. அதன்படி சட்ட அமைச்சகமும் சில கருத்துகளை தெரிவித்து உள்ளது.

எனவே, ‘ஸ்கீம்’ என்றால் என்ன? என்பது பற்றி மாறுபட்ட கருத்துகள் ஏற்பட்டு இருப்பதால், அது குறித்து விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. இதற்கு மத்திய அரசின் தலைமை வக்கீல் கே.கே.வேணுகோபால் அனுமதி அளித்து உள்ளார்.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் விளக்கம்கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்றால் என்ன என்பது குறித்து விளக்கம் தர வேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும்’’ எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Supreme Court Cauvery Management Board
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment