Advertisment

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையா? எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு முடிவு செய்வார்கள் - கோர்ட் உத்தரவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தினர் அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவில் இல்லாத உணவுப் பொருட்களை ஏன் அனுப்புகிறார்கள் என்று டெல்லி நீதிமன்றம் கேட்டது; தினசரி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்ற அவரது மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது.

author-image
WebDesk
New Update
Arvind Kejriwal

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தினர் அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவில் இல்லாத உணவுப் பொருட்களை ஏன் அனுப்புகிறார்கள் என்று டெல்லி நீதிமன்றம் கேட்டது; தினசரி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்ற அவரது மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது.

Advertisment

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ கான்பரன்சிங் மூலம் தினமும் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுவை அமைக்க திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அந்த மருத்துவக் குழு கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்கும் என்று கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்க: Medical board with AIIMS doctors to decide if CM Kejriwal needs insulin

டெல்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் (இ.டி) மார்ச் 21-ம் தேதி கைது செய்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீரிழிவு நோய் காரணமாக சிறைக்குள் இன்சுலின் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி முதல்வர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவால் முன்னிலையில் தினமும் 15 நிமிடங்களுக்கு ஒரு தனியார் மருத்துவரிடம் ஆன்லைனில் ஆலோசனை அளிக்க வேண்டும் எனக் கோரினார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்த உணவை வழங்கலாம், ஆனால் அந்த உணவுகள் ஏப்ரல் 1-ம் தேதி அவரது மருத்துவர் வழங்கிய உணவு அட்டவணையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் திங்கள்கிழமை கூறியது. மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட உணவில் இருந்து எந்த விலகலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் சாப்பிடும் உணவு மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளில் சில குறைபாடுகளை நீதிமன்றம் குறிப்பிட்டது.

“... வீட்டில் சமைத்த உணவாக வழங்கப்படும் உணவுப் பொருட்களும், நீரிழிவு மற்றும் எடை மேலாண்மைக்கான சிறப்பு மையமான ‘வெல்த்’ அவருடைய மருத்துவர் பரிந்துரைத்த உணவில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. பரிந்துரைக்கப்பட்ட உணவிலும் மாம்பழங்கள் குறிப்பிடப்படவில்லை.” என்று பவேஜா உத்தரவில் குறிப்பிட்டார்.

இ.டி மற்றும் சிறை அதிகாரிகளின் பதிலில் இருந்து, திகாரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்சுலின் கேட்கவில்லை என்பது தெரியவந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

அதே நேரத்தில், கெஜ்ரிவாலின் உணவில் இல்லாத உணவுப் பொருட்களை அவருக்கு அனுப்ப அனுமதித்ததற்காக திகார் சிறை அதிகாரிகளையும் நீதிமன்றம் கண்டித்தது. “... விண்ணப்பதாரரின் (கெஜ்ரிவால்) குடும்பத்தினர் அவருடைய மருத்துவப்படி பரிந்துரைக்கப்பட்ட உணவுக்கு எதிராக, அதாவது மாம்பழம், இனிப்புகள், ஆலு பூரி போன்ற உணவுப் பொருட்களை ஏன் அனுப்புகிறார்கள் என்பதை இந்த நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை…” என்று நீதிபதி கூறினார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே மாம்பழம் மற்றும் பிற உணவுப் பொருட்களை சாப்பிட்டு தனது ரத்த சர்க்கரை அளவை உயர்த்தி ஜாமீன் பெறுவதற்கான காரணத்தை உருவாக்குவதாக இ.டி வியாழக்கிழமை குற்றம் சாட்டியது.

திகாரில், கெஜ்ரிவாலின் உணவில் முட்டை, போஹா, நம்கீன், வாழைப்பழம், உப்புமா, ஊத்தப்பம், ரொட்டி, பூரி சப்ஜி, சாலட், ராஜ்மா, அரிசி, தேநீர், மாம்பழம், பப்பாளி மற்றும் இனிப்புகள் ஆகியவை அடங்கும் என்று இ.டி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு 3 முறை மட்டுமே தனது வீட்டில் இருந்து மாம்பழங்கள் அனுப்பப்பட்டதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். தவிர, 6 முறை சர்க்கரை இல்லாத இனிப்புகளை சாப்பிட்டதாக கெஜ்ரிவால் கூறினார்.

அவரது மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இன்சுலின் எடுத்துக் கொண்டால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு வெகுவாகக் குறையும் என்று சிறை அதிகாரிகளின் வக்கீல் தெரிவித்தார். பெரும்பாலான நாட்களில் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு சாதாரணமாக இருப்பதாக அவர் கூறினார். சமீபத்தில், சிறை அதிகாரி ஒருவர், எய்ம்ஸ் மூத்த நிபுணர்களின் 40 நிமிட வீடியோ ஆலோசனையின் போது,  “இன்சுலின் பிரச்னையை கெஜ்ரிவால் எழுப்பப்படவில்லை, அல்லது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படவில்லை” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Arvind Kejriwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment