Advertisment

ட்விட்டரின் புதிய லோகோ 'X' : எலான் மஸ்க் நிர்வாகத்தின் கீழ் ட்விட்டர் சிறப்பு? அல்லது மோசமானது?

எலான் மஸ்க்கிற்கு 'X' என்ற எழுத்தில் ஆர்வமாக உள்ளது. அவரின் பல நிறுவனங்களில் இந்த எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Twitter logo rebrands to 'X' announces Elon musk

Twitter logo rebrands to 'X' announces Elon musk

ட்விட்டரின் ஆஸ்தான லோகோ நீலக் குருவிக்கு பதிலாக எக்ஸ் (‘X’) என லோகோ மாற்றப்படுவதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதே போல் நிறுவனத்தின் டொமைன் X.com என்பதற்கு பதில் Twitter என மாற்றப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

Advertisment

உலகப் பணக்காரரான எலான் மஸ்க் கடந்தாண்டு ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் தற்போது முக்கியமான ஒன்றாக நிறுவனத்தை ரீபிராண்ட் செய்யும் வகையில் ட்விட்டர் லோகோவை மாற்றுவதாக அறிவித்துள்ளார்.

ட்விட்டரில் என்னென்ன மாற்றங்கள்?

'எக்ஸ்' என ட்விட்டர் லோகோ மாற்றப்பட்டால் ட்விட்டரின் தற்போதைய சின்னம் தனித்துவமான சின்னம் நீலக் குருவி கைவிடப்படும். 'எக்ஸ்' லோகோவை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தும் போது அவரின் பிரோபைல் பிக்ஸர் 'எக்ஸ்' லோகோ படம் வைக்கப்பட்டிருந்து.

மேலும் எலான் மஸ்க் இந்த லோகோ மாற்றம் குறித்து ட்விட்டர் ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது ட்விட்டர் முகவரியிலிருந்து தான் கடைசியாக அனுப்பும் மெயில் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'X' பற்றிய கதை

சுவாரஸ்யமாக, எலான் மஸ்க் இந்த 'X' என்ற எழுத்தில் ஆர்வம் உள்ளவர். 1999-ம் ஆண்டு எலான் மஸ்க் இணை நிறுவனராக X.com என்ற ஆன்லைன் வங்கியைத் தொடங்கினார். அது இறுதியில் Paypal என செயல்பட்டு வருகிறது. அடுத்து மஸ்க்கின் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸில் X எழுத்து உள்ளது மற்றும்

டெஸ்லா அறிமுகப்படுத்திய முதல் எஸ்யூவி மாடலின் பெயரும் இதுவாகும்.

மஸ்க் வாக்குறுதி என்ன?, வழங்கியது என்ன? - ஒரு பார்வை

ட்விட்டரை வாங்குவதற்கு முன் எலான் மஸ்க் சில வாக்குறுதிகளை வழங்கினார். போட் பிரச்சனைக்கு தீர்வு, பேச்சு சுதந்திரத்திற்கான இடமாக ட்விட்டர் தளம் மாற்றப்படும் என உறுதியளித்தார்.

போட், வெறுப்பு பேச்சுகள் அதிகரிப்பு

தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தகவல் அறிவியல் நிறுவனம், ஓரிகான் ஸ்டேட் யுனிவர்சிட்டி, யுசிஎல்ஏ மற்றும் யுசி மெர்சிட் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆண்டு ஏப்ரலில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி. மஸ்க் நிர்வாகத்தின் கீழ் ட்விட்டர் தளத்தில் போட் பிரச்சனை அதிகரித்துள்ளன, மேலும் வெறுக்கத்தக்க பேச்சு நிகழ்வுகளும் உள்ளன என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

"மஸ்க் நிறுவனத்தை வாங்கியப் பின், அக். 1 முதல் நவம்பர் 29 (2022) வரை வெறுப்பு பதிவுகளின் ஒரு நாள் சராசரிப் பதிவு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. மேலும் இது அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து அதிகரித்தாகவும் கூறியுள்ளது.

publive-image

ட்விட்டரில் போட் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று மஸ்க் உறுதியளித்த நிலையிலும் அது செய்யப்படவில்லை. போட்களின் எண்ணிக்கை மற்றும் வகைகள் உண்மையில் அதிகரித்தன என்று அந்த ஆய்வு கூறுகிறது.

publive-image

வெளிப்படைத்தன்மை குறைகிறது

அதே நேரத்தில், ட்விட்டரின் வெளிப்படைத்தன்மை எலான் மஸ்க் நிர்வாகத்தின் கீழ் குறைந்துள்ளன. பிப்ரவரியில், நிறுவனம் ட்விட்டர் APIக்கான இலவச அணுகலை நிறுத்துவதாகவும், கட்டண பதிப்பை அறிமுகப்படுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ஆராய்ச்சியாளர்களை வெகுவாக பாதித்துள்ளது, அதுவும் குறிப்பாக ஆன்லைனில் அவதூறு, வெறுப்பு பேச்சு குறித்தான ஆய்வுகளை மேற்கொள்பவர்களை கடுமையாக பாதித்தது.

ட்விட்டரில் மனிதர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இந்த APIகளை நம்பியிருந்தன, மேலும் அதன் மீது ஒரு விலையை அறிமுகப்படுத்தியதால் அவர்களில் பலர் அதிலிருந்து வெளியேறினர்.

இதற்கிடையில், பாரம்பரிய ஊடகங்கள் அவரைப் பற்றிய செய்தி மற்றும் நிறுவனத்தில் அவர் எவ்வாறு செயல்பாடுகளை கையாண்டார் என்பதை மஸ்க் பகிரங்கமாக மீறுவதைக் காட்டியுள்ளதால், பத்திரிகையாளர்களிடமிருந்து கேள்விகளைப் பெறுவதற்கான நிறுவனத்தின் நாட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. press@twitter.com மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் எந்த வினவல்களும் இப்போது ஒரு ‘பூப்’ ஈமோஜியுடன் பதில் அளிக்கப்படுகிறது.

பேச்சு சுதந்திரம் (T&C க்கு உட்பட்டது)

44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியப் பின் அவர் அவரை "Free speech absolutist” என்று அழைத்துக் கொண்டார். மேலும் "சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படும் டிஜிட்டல் டவுன் சதுக்கம்" என்றும் அறிவித்தார்.

இருப்பினும், அவரது தலைமையின் கீழ் ஏறக்குறைய ஒரு வருடத்தில், பேச்சு சுதந்திரம் நிலத்தின் சட்டங்களைப் பின்பற்றும் தளமாக மாறியது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எலான் மஸ்க் கூறுகையில், சமூக ஊடக தளங்களுக்கான இந்தியாவின் விதிகள் "மிகவும் கடுமையானவை" என்றும், ட்விட்டர் ஊழியர்களை சிறைக்கு அனுப்பும் அபாயத்தை விட அரசாங்கத்தின் தடை உத்தரவுகளுக்கு இணங்குவதாகவும் கூறினார்.

ட்விட்டரின் சில அனுமதிகளை இந்திய அரசாங்கம் முடக்கியதை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இறுதியில் இவ்வழக்கு மத்திய அரசுக்கு சாதகமாக சென்றது. கடந்த ஜூலை மாதம் முதன்முதலில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவின் ஆன்லைன் தணிக்கை ஆட்சிக்கு ஒரு நம்பிக்கைக்குரிய சவாலாக பார்க்கப்பட்டது. இது மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு முன்னால் தொடுக்கப்பட்ட வழக்காகும். இதன்பின் மஸ்க் இந்தியாவில் வழக்கு தொடர்ந்தது குறித்து தம்மிடம் முறையாக தெரிவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும் அதன் நடவடிக்கைகள் நாட்டில் அதன் வணிகத்தை பாதிக்கக்கூடும் என்றும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Twitter
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment