Advertisment

காலம் தாண்டி நிற்கும் காவியக் குரல்: மீண்டும் மீண்டும் கேட்ட தூண்டும் உமா ரமணன் சிறந்த பாடல்கள்

1980ம் ஆண்டு நிழல்கள் திரைப்படம் வெளியானது. இத்திரைபடத்தில் இடம் பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடலை உமா ரமணன் பாடினார். இந்த பாடல் தமிழ் திரை உலகில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

1980ம் ஆண்டு நிழல்கள் திரைப்படம் வெளியானது. இத்திரைபடத்தில் இடம் பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடலை உமா ரமணன் பாடினார். இந்த பாடல் தமிழ் திரை உலகில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

Advertisment

1981-ல் வெளிவந்த ’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் வந்த ‘ஆனந்த ராகம்’ பாடலும் பலரால் ரசிக்கப்பட்டது. கோவில் புறா திரைப்படத்தில் ’ அமுதே தமிழே’ பாடலை உமா ரமணன் பாடி இருந்தார். உமா ரமணின் தனிச் சிறப்பே, அவர் தமிழை உச்சரிக்கும் விதம்தான்.

1982ம் ஆண்டு தூறல் நின்னுப் போச்சு படத்தில் ’பூபாளம் இசைக்கும்’ பாடலை ஜேசுதாஸுடன் இணைந்து உமா ரமணன் பாடினார். வைதேகி காத்திருந்தாள் படத்தில், இளையராஜாவுடன் இணைந்து ‘ மேகங் கருக்கையிலே’ பாடலை பாடினார்.

மேலும் அவர் பாடகர் ஜேசுதாஸுடன் இணைந்து பாடிய எல்லா பாடல்களும் இன்றளவும் ரசிக்கப்படுகிறது. இதில்  ‘கஸ்தூரி மானே, ‘கண்ணனே நீ வர, ‘ஆகாய வெண்ணிலாவே, ‘நீ பாதி நான் பாதிபாடல் எல்லாம் இன்றளவும் பலரது பிளே லிஸ்டில் உள்ளது.  

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment