Advertisment

ஈஸ்வரிக்கு நோஸ்கட் கொடுத்த ராதிகா... கூலாக பேசிய பாக்யா : அடுத்து என்ன நடக்குமோ!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baakiya Ewas

பாக்கியலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ராதிகாவின் கர்ப்பம் குறித்து ஈஸ்வரியிடம் கோபி சொல்லிவிட்ட நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் தற்போது ராதிகா கர்ப்பமானதை தனது வீட்டில் எப்படி சொல்வது என்று தெரியாமல் கோபி அல்லாடுவதும்அவன் மீது ராதிகா கோபப்படுவதும் ரசனையின் உச்சமாக இருந்து வருகிறது.

3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். ராதிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில்கோபியின் மகன் செழியனுக்கு குழந்தை பிறந்து கோபி தாத்தா ஆகிவிட்டார். இந்த நிலையில்தற்போது ராதிகா கர்ப்பமாக இருக்கிறார். இது ராதிகாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும்கோபிக்கு சங்கடமாக இருக்கிறது.

ராதிகாவின் வற்புறுத்தல் காரணமாக இந்த குழந்தையை பெற்றுக்கொள்ள நினைக்கும் கோபிதனது வீட்டில் சொல்ல போராடி வந்த நிலையில், நேற்றைய எபிசோட்டில் உண்மையை சொல்லிவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்றைய எபிசோட்டில், இந்த குழந்தை வேண்டாம் என்று ஈஸ்வரி, ராதிகாவிடம் சொல்ல, இது நானும்கோபியும் எடுக்க வேண்டிய முடிவு நீங்க வெளியில போங்க என்று ராதிகா சொல்லிவிடுகிறாள்.

வழக்கமாக கோபப்படும் ஈஸ்வரி, இந்த முறை பொறுமையாக, நீ இந்த வீட்டில் தானே இருக்க, கோபிக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். இன்னும் கொஞ்சநாளில் இனியாவுக்கு கல்யாணம் ரெடி ஆகிவிடும். அப்போது இது பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என்று ஈஸ்வரி சொல்ல, கோபி பிள்ளைகள் எல்லோரையும் என்னுடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அமிர்தாவுக்கு குழந்தை பிறந்தால் தான் எழிலுக்கு அவளுக்கும் பிடிப்பு ஏற்படும் என்று சொன்னீர்கள்.

இந்த குழந்தை பிறந்தால் தான் எனக்கும் கோபிக்கும் ஒரு பிடிப்பு ஏற்படும் இந்த விஷயத்தில் நீங்கள் தலையிடாதீங்க, என்று ராதிகா சொல்ல, என்ன சொல்வது என்று தெரியாமல் கோபி அல்லாடுகிறான். ஆனாலும் ஈஸ்வரி மேலும் பேச வர, இதற்கு மேல் இதை பற்றி பேச வேண்டாம் என்று ராதிகா சொல்லிவிட, பேசாம போய்டுங்க என்று சொல்லி அவமானப்படுத்துகிறாள். வெளியில் வரும் ஈஸ்வரி சோகமாக இருக்க பாக்யா விசாரிக்கிறாள்.

உண்மையை சொல்லாத ஈஸ்வரி இந்த வீட்டில் என்னமோ நடக்குது என்று சொல்ல, புரிந்துகொண்ட பாக்யா, ராதிகா கர்ப்பத்தை பற்றி சொல்றீங்களா என்று கேட்க, இதை கேட்டு அதிர்ச்சியடையும் ஈஸ்வரி உனக்கு கஷ்டமாவே இல்லையா என்று கேட்கிறாள். செல்வியும் திட்ட, பாக்யா இதை பற்றி யோசிக்காமல், இதை நினைத்து உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க என்று ஈஸ்வரிக்கு அட்வைஸ் சொல்கிறாள். பிறகு செல்வி இது குறித்து பாக்யாவிடம் கேட்க, ஒரே விஷயத்திற்காக எத்தனை முறை வருத்தப்படுவது என்று கேட்க அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment