Advertisment

கோர்ட் படி ஏறிய ஜெனி... கலக்கத்தில் செழியன் : ஈஸ்வரிக்கு சமாதானம் சொன்ன பாக்யா

பாக்கியலட்சுமி சீரியலின் சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Jeni Chezhaiyan

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

எழில் – அமிர்தா வாழ்க்கையில் கணேஷ் வந்தது குறித்து பாக்யா குடுமபத்தில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், இரவு முழுவதும் அனைவரும் புலம்பிவிட்டு தூங்கிவிட்டனர். காலையில் எழில் எழுந்து ஆபீஸ்க்கு கிளம்புகிறான். அவனை பார்த்து அமிர்தாவும் எழுந்திருக்க, சாரிங்க ரொம்ப நேரம் தூங்கிட்டேன் என்று சொல்கிறாள். அதை கேட்ட பரவாயில்லை, நைட் லேட்டாதானே தூங்குன இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு என்று சொல்கிறான்.

அதன்பிறகு வெளியில் வரும் எழில் வழக்கம்போல் தனது அம்மாவிடம் போய்ட்டு வறேன் மா என்று சொல்லிவிட்டு கிளம்ப, எழில் நீ நல்லதானே இருக்க, எதாவது பேசனுமா, எதுவா இருந்தாலும் மனசு விட்டு பேசு என்று சொல்கிறான் கோபி. அதை கேட்ட எழில் நான் நல்லாத்தான் இருக்கிறேன். அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா என்று சொல்ல, பின்னாடி செழியன் வந்து விசரிக்கிறான்.

அப்போது செழியன் கிளம்பி இருப்பதை பார்த்த எழில் நீ எங்க கிளம்பிட்ட என்று கேட்க, இன்னனைக்கு கோர்ட்ல ஹியரிங் இருக்கல்ல அதான் கிளம்புறேன் என்று சொல்கிறான். பாக்யாவும் கிளம்பு, அவங்க எல்லாரும் குடும்பத்துடன் வருவார்கள் நீங்க மட்டும் அங்க போய் என்ன பண்ண போறீங்க நானும் வருகிறேன் என்று ஈஸ்வரி கிளம்ப, கோபியும் நானு வருகிறேன் என்று சொல்லிவிட்டு ராதிகாவிடம் அனுமதி கேட்க போகிறான்.

இதை கேட்ட ராதிகா, அவங்கதான் போறாங்கல்ல அப்புறம் நீங்க எதுக்கு போறீங்க, யாரும் போகலனா நீங்க போலம். அதன் எல்லோரும் போறாங்களே அப்புறம் என்ன. இப்போ நீங்க போனா, பின்னாடி எதாவது பிரச்சனை வந்தா உங்க பசங்க உங்களுக்கு எதிராக பாக்யா பின்னாடி தான் நிப்பாங்க என்று சொல்ல, இவளை மட்டும் புரிஞ்சிக்கவே முடியால என்று கோபி புலம்புகிறான்.

அதன்பிறகு அனைவரும் கிளம்பி கோர்ட்டுக்கு போக, அங்கு அம்மா அப்பாவுடன் வந்திருந்ததால் ஜெனி இவர்களிடம் பேசாமல் போகிறாள். இதை பார்த்த ஈஸ்வரி செழியன் தான் தப்பு பண்ணான் நாம என்ன பண்ணோம் நம்மகிட்ட கூட பேசமா போறா என்று சொல்ல, ஈஸ்வரி அவளை சமாதானப்படுத்துகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment