Advertisment

அமிர்தாவுக்கு செக் வைக்கும் கணேஷ்... பாக்யாவை தைரியப்படுத்தும் கோபி : என்ன நடக்குமோ!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Amirtha Baakiya

பாக்யலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களாக இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இன்று பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

செழியன் ஜெனி பிரச்சனைக்கே வீட்டில் பெரிய கலவரம் வெடித்த நிலையில், தற்போது அமிர்தா – எழில் இடையே கணேஷ் வந்தது குறித்து நினைத்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனால் ஆளுக்கொரு பக்கம் இருந்து புலம்பிக்கொண்டிருக்க, தனது அறையில் அழுதுகொண்டிருக்கும் அமிர்தாவுக்கு ராதிகா ஆளுதல் சொல்கிறார். அப்போது அங்கு வரும் இனியா, நீங்க எங்களை விட்டுட்டு போய்டாதீங்க என்று சொல்கிறார்.

நான் இப்போ தான் ஜெனி அக்காவை பார்த்துட்டு வரேன் அவங்க கிட்டையும் எங்களை விட்டுட்டு போய்டாதீங்க என்று சொல்லிவிட்டு தான் வந்தேன். அவங்க வந்தப்போ வீடு நல்லா இருந்துச்சு. அதுக்கப்புறம் நீங்களும் நிலா பாப்பாவும் வந்தப்போ இன்னும் ஜாலியா இருந்துச்சு. ஆனால் இப்போ ஜெனி போய்ட்டாங்க, நீங்களும் போற நிலைமை இருக்கு. தயவு செய்து எங்களை விட்டுட்டு போய்டாதீங்க அக்கா என்று சொல்கிறார்.

அப்போது எழில் அங்கு என்ட்ரி கொடுக்க, ராதிகா இனியாவை கூட்டிக்கிட்டு கிளம்புகிறார். அப்போது இனியா எங்களை விட்டுட்டு போய்டாதீங்க அக்கா என்று சொல்ல, அதெல்லாம் போக மாட்டா என்று ராதிகா சொல்கிறார். இதை கேட்டு இனியா, நீங்கதான் சொல்றீங்க ஆனா அவங்க ஒன்னுமே சொல்லல என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். அதன்பிறகு அவர் உயிருடன் இருப்பது எனக்கு தெரியாது என்னை மன்னித்துவிடுங்க என்று எழிலிடம் சொல்கிறார்.

இதை கேட்டு எழில் உனக்கு தெரியாதுனு எனக்கு தெரியும் அமிர்தா. என்னை விட்டுட்டு போய்டாத. நீயும் நிலா பாப்பாவும் தான் எனக்கு என்று சொல்ல, அமிர்தா எழிலை கட்டிப்பிடித்து அழுகிறாள். இந்த பக்கம், என் பிள்ளைகள் நல்லா இருக்க வேண்டும் என்றுதான் நான் அவர்கள் விருப்பப்படி கல்யாணம் பண்ணி வச்சேன். ஆனா அவர்கள் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே என்று சொல்ல, ஈஸ்வரி பாக்யாவுக்கு ஆறுதல் சொல்கிறார்.

அடுத்து கணேஷ் தனது அப்பா அம்மாவிடம், அமிர்தா ஏன் அந்த எழில் பின்னாடி போய் ஒளியனும், நிலா மேல எனக்கு தான் முழு உரிமையும் இருக்கு. அவர்கள் எனக்கு கிடைகக் நான் எந்த எல்லைக்கும் போவேன் என்று சொல்கிறான். இதனிடையே ராதிகாவிடம் பேசிக்கொண்டிருக்கும் கோபியை பார்க்க வரும் பாக்யா, இன்னைக்கு மட்டும் நீங்க இல்லனா என்ன நடந்துருக்கும்னு தெரியல. ரொம்ப நன்றி என்று சொல்கிறார்.

இதை கேட்ட கோபி, கவலைப்படாதே பாக்யா, எழில் அமிர்தா இருவரும் சந்தோஷமா இருப்பாங்க. என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்வோம் என்று ஆளுதல் சொல்ல, கோபியின் பேச்சை கேட்டு. ராதிகா அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment