Advertisment

நாகினி vs நாகினி... உச்சக்கட்ட மோதல் : எதிர்பார்ப்பில் கலர்ஸ் தமிழ் சீரியல்

தமிழில் திகில் மற்றும் மர்மம் நிறைந்த சீரியல்களை பார்க்க தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலர்ஸ் தமிழ் நாகினி சீரியலை ஒளிபரப்பி வருகிறது.

author-image
WebDesk
New Update
Naagini 6

கலர்ஸ் தமிழ் நாகினி சீரியல்

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் நாகினி சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் ரீ-என்டரி ஆகியுள்ள அனிதா ஹாசனந்தனி, மெஹெக்கிற்கு அழியாமையைக் கொடுக்கிறாள், அதனால் அவர்கள் பிரார்த்தனாவை எதிர்த்துப் போராட முடியும். இதனால் வலிமையான நாகினிகளுக்கு இடையே அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisment

சின்னத்திரையில், முன்னணி சேனல்கள் அனைத்திலும், குடும்ப உறவுகளை மையப்படுத்திய சீரியல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. அதே போல் திகில் மற்றும் மர்மம் நிறைந்த சீரியல்களை பார்க்க தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலர்ஸ் தமிழ் நாகினி சீரியலை ஒளிபரப்பி வருகிறது.

தற்போதைய சின்னத்திரை சீரியல்களை எடுத்துக்கொண்டால், திகில் மற்றும் மர்ம சீரியலாக வருவது நாகினி மட்டும் தான், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் வேறு மொழி சீரியலின் டப்பிங் வெர்ஷன் தான் என்றாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த வாரம் முதல் ரேட்டிங்கில் ஏற்றம் கண்டுள்ள நாகின் 6 சீரியலில், ஷங்கிரிலாவாக ரஷாமி தேசாய், ஷேஷாவாக அடா கான் ஆகியோர் வந்துள்ளனர். இந்த நாகினியின் சூப்பர்நேச்சுரல் ஃபிரான்சைஸ் ஷோவில் முந்தைய நாகினிகள் கேமியோக்களை அடிக்கடி பார்க்கிறோம். அந்த வகையில, ரஷாமி தேசாய்க்குப் பிறகு அனிதா ஹாசனந்தனி மீண்டும் ஒரு கேமியோவில் நடிக்க இருக்கிறார்.

அனிதா ஹாசனந்தனியை விசாகா/விஷ் கேரக்டரில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. அவர் சீசன் 4 மற்றும் 5 இல் தோன்றினார். தேஜஸ்வி பிரகாஷ், சிம்பா நாக்பால், ஊர்வசி தோலக்கியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நாகினி சீசன் 6 புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இது முந்தைய சீசன்களை போல காதல் - பழிவாங்கும் கதையாக இல்லாமல் கோவிட்-19 தொற்று பாதிப்பை பின்புலமாக கொண்டுள்ளது. முந்தைய சீசன்களின் தொடர்ச்சியாக தொடங்கி, நாகினியின் கதையின் மையமாக நாகமணி மற்றும் சூர்யவன்ஷி குடும்பம் இருந்த இடம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Colors Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment