Advertisment

'இந்த மெட்டுக்கு நான் தான் பாட்டு எழுதுவேன்' எம்.எஸ்.வி-யிடம் போராடி ஜெயித்த கண்ணதாசன்; அந்த ஹிட் பாடல் எது தெரியுமா?

சிவாஜிக்கு தன் குழந்தை எது என்று தெரியாமல், இரண்டு குழந்தையும் வளர்ப்பார். அப்போது குழந்தைக்கு கணவன் மனைவி இருவரும் இணைந்து தாலாட்டு பாடுவது தான் இந்த பாடல்

author-image
WebDesk
New Update
MSV Kannadasan Like

எம்.எஸ்.வி - கண்ணதாசன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எம்.எஸ்.வி வாசித்த மெட்டில் மயங்கிப்போன கவியரசர் கண்ணதாசன், இந்த மெட்டுக்கு நான் பாடல் எழுதுகிறேன் என்று சொல்ல, அதற்கு எம்.எஸ்.வி மறுத்துள்ள நிலையில், கண்ணதாசன் அவரிடம் உரிமையோடு சண்டை போட்டுள்ளார்.

Advertisment

1963-ம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பார் மகளே பார். சிவாஜி கணேசன், சவுக்கார் ஜானகி, முத்துராமன், ஏவிஎம் ராஜன், எம்.ஆர்.ராதா, மனோரமா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசைமைத்திருந்தனர். மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டத்துடன் வெளியான முதல் படம் இதுதான். இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

பெரும் பணக்காரரான சிவாஜிக்கு, குழந்தை பிறக்கும் சமயத்தில் அவர் மனைவியுடன் இருக்கமாட்டார். அதேபோல் அவர் மனைவிக்கு குழந்தை பிறக்கும்போது, அருகில் ஒரு நாட்டிய பெண்மணிக்கும் குழந்தை பிறக்கும். இந்த இரு குழந்தைகளையும் குளிப்பாட்ட எடுத்து சென்ற நர்ஸ், மின்சாரம் தாக்கி இறந்துவிட, குழந்தை பெற்ற நாட்டிய பெண்மணியும், குழந்தையை விட்டுவிட்டு வெளியேறிவிடுவார்.

இதனால் சிவாஜிக்கு தன் குழந்தை எது என்று தெரியாமல், இரண்டு குழந்தையும் வளர்ப்பார். அப்போது குழந்தைக்கு கணவன் மனைவி இருவரும் இணைந்து தாலாட்டு பாடுவது தான் இந்த பாடல், நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே, நெய்யூறும் காணகத்தில் கைகாட்டும் மானே என்று தொடங்கும் இந்த பாடலில், கதைக்களம் மதுரையில் நடப்பதால், நீரோடும் வைகை என்பது சரியாக இருக்கிறது.

பொதுவாக சோதனை முயற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட எம்.எஸ்.வி விஸ்வநாதன் இந்த பாடலுக்கு வரிகள் இல்லாமல் வெறும் விசில் சத்தம் ஹம்மிங் மட்டும் பயன்படுத்தி வித்தியாசமாக கொடுக்க முயற்சித்துள்ளார். அப்போது இந்த டியூனை எம்.எஸ்.வி வாசிக்க, இதை கேட்ட கண்ணதாசன், விசு டியூன் அருமையாக இருக்கிறது. இதற்கு நான் பாட்டு எழுதுகிறேன் என்று சொல்ல, நான் சோதனை முயற்சியில் இருக்கிறேன் கவிஞரே வேண்டாம் என்று கூறியுள்ளார்.

கண்ணதாசன் எவ்வளவோ சொல்லியும் எம்.எஸ்.வி கேட்காததால், தயாரிப்பாளரிடம் கண்ணதாசன் முறையிட, இது உங்களுக்குள் இருக்கும் பிரச்சனை நீங்களே சரி செய்துகொள்ளுங்கள் என்று கூறியள்ளார். அதன்பிறகு சிவாஜியிடம் சொல்ல அவரும் இதே பதிலை சொல்ல, அடுத்ததாக இயக்குனர் பீம்சிங்கிடம் கூறியுள்ளார் கண்ணதாசன், இதை கேட்ட பீம்சிங் எம்.எஸ்.வியை சமாதானப்படுத்த, எம்.எஸ்.வியும் இந்த டியூனுக்கு பாடல் எழுத சம்மதிக்கிறார்.

அப்போது எழுதிய பாடல் தான் ‘’நீரோடும் வைகையிலே’’ என்ற பாடல். பாடல் வரிகளுக்கு எம்.எஸ்.வி ஓகே சொன்னாலும் தனது சோதனை முயற்சியை விடாத அவர், இந்த பாடலில் விசில் சத்தம் ஹம்மிங் என அனைத்தையும் பயன்படுத்தியிருப்பார். டி.எம்.எஸ். பி.சுசீலா இணைந்து பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment