Advertisment

பிரபல இயக்குனருக்கு வாய்ப்பை மறுத்த ஜெமினி கணேசன்: பின்னாளில் அதே இயக்குனர் படங்களில் ஹீரோ

ஜெயலலிதா அறிமுகமான படத்தில் ராஜ்குமார் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் கிருஷ்ணகுமாரி நாயகியாக நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Jayalalitha Jemini Ganesan

ஜெயலலிதா - ஜெமினி கணேசன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தனக்கு வாய்ப்பு இல்லை என்று சொன்ன ஒரு நடிகரை வைத்து பல படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் கே.பாலச்சந்தர். அந்த நடிகர் ஜெமினி கணேசன். 1949-ம் ஆண்டு தனது கல்லூரி படிப்பை முடித்து வேலை தேட முயற்சித்த கே.பாலச்சந்தர், ஜெமினி ஸ்டூடியே நிறுவனத்திற்கு வேலை கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Advertisment

இந்த கடிதத்தை அனுப்பி 7வது நாளில் பாலச்சந்தருக்கு ஜெமினி நிறுவனத்திடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. உங்கள் கடிதம் எங்களுக்கு கிடைத்தது, ஆனால் இப்போ உங்கள் திறமைக்கு ஏற்ப வேலை எதுவும் இங்கே காலி இல்லை. அப்படி ஒரு வேலை வாய்ப்பு உருவாகும்போது நிச்சயமாக உங்களுக்கு வேலை தருகிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கடிததத்தின் இறுதியில் கையெழுத்திட்டவர் ஆர்,கணேஷ். அப்போது ஜெமினி ஸ்டூடியோவில் கேஸ்டிங் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த ஆர். கணேஷ் தான் பின்னாளில் ஜெமினி கணேசனாக மாறி பல படங்களில் நடித்தவர். அதன்பிறகு உதவி இயக்குனராக இருந்து நீர்குமிழி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கே.பாலச்சந்தர் ஜெமினி கணேசன் நடிப்பில் பல படங்களை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்ற ஜெயலலிதா 8 வயதிலேயே நடன இயக்குனராக பணியாற்றிய முதல் பெண்மணி என்பது பலரும் அறியாத ஒரு தகவலாக உள்ளது. 

கர்நாடகாவில் பிறந்த ஜெயலலிதா,  1961-ம் ஆண்டு இபிஎஸ்டி என்ற ஆங்கில படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு,  கன்னடத்தில் வெளியான ஸ்ரீ சைல மகாத்மே என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜெயலலிதா.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது தனது தாயார் சந்தியாவுடன் ஜெயலலிதா சென்றுள்ளார். ராஜ்குமார் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் கிருஷ்ணகுமாரி நாயகியாக நடித்திருந்தார். அரோர் பட்டாபி என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நாயகி கிருஷ்ணகுமாரியுடன் ஒரு குழந்தை நடித்துக்கொண்டிருந்தது.

திடீரென அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அந்த படத்தின் இயக்குனர் சந்தியாவுடன் இருந்த ஜெயலலிதாவை பார்த்துள்ளார். அப்போது ஜெயலலிதாவுக்கு 8 வயது. இயக்குனர் உடனடியாக வந்து அவரிடம் நீ நடிக்கிறாயா என்று கேட்டபோது, ஜெயலலிதா உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். அவரது தாயார் சந்தியாவும் சம்மதம் தெரிவித்தை தொடர்ந்து ஜெயலலிதா இந்திய படத்தில் அறிமுகமானார்.

இந்த படத்தில் அவர் நடித்த முதல் காட்சி நடனமாடுவது போன்ற காட்சி. இது குறித்து ஒரு பத்திரக்கை பேட்டியில் குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா அந்த படத்தை பொருத்தவரை நான் ஒரு நடிகை மட்டுமல்ல நடன இயக்குனரும் நான்தான். படப்பிடிப்பு தொடங்கியவுடன் எங்கிருந்தோ ஒரு ஹார்மோனியம் சத்தம் கேட்டது. அதற்கு ஏற்றபடி நான் நடனம் ஆடினேன். எனக்கு ஏற்கனவே நடனம் தெரியும் என்பதால் எனது இஷ்டத்திற்கு என்னை ஆட விட்டுவிட்டார்கள்.

நான் ஆடிய நடனத்தை படமாக்கிவிட்டு அதற்கு பின் தான் அதில் பாடலை சேர்த்தார்கள். அந்த வகையில் பார்த்தால் இந்த படத்தில் நான் ஒரு குழந்தை நட்சத்திரம் மட்டுமல்ல படத்தின் நடன இயக்குனரும் நான் தான் என்று கூறியுள்ளார். ஜெயல்லிதா சொன்னதை வைத்து பார்க்கும்போது 8 வயதில் நடன இயக்குனராக பணியாற்றிய முதல் பெண்மணி அவர் தான். பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment