Advertisment

அவர் என் காதலிதான்... ஆனா கல்யாணம் பண்ண முடியல: ஸ்ரீவித்யா குறித்து மனம் திறந்த கமல்ஹாசன்

அந்த படம் மூலமாக எங்களுக்கு ஏற்பட்ட நட்பு கடைசிவரை நீடித்தது. அது கல்யாணத்தில் தான் முடிய வேண்டும் அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamal Haasan Srivdya

அபூர்வ ராகங்கள் படத்தில் கமல் - ஸ்ரீவித்யா

நடிகர் கமல்ஹாசன், சில வருடங்களுக்கு முன்பு தனது காதலியும் நடிகையுமான ஸ்ரீவித்யாவுடன் இருந்த காதல் குறித்து பேசியுள்ள வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் பல புதுமையான டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், அதன்பிறகு பல தடைகளை கடந்து சினிமாவில் நாயனாக அறிமுகமாக இவருக்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர். தொடர்ந்து அவரது இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிவாஜி இல்லாத இடத்தை பூர்த்தி செய்வது கமல்ஹாசன் தான் என்று பலரும் கூறி வருகின்றனர். அதற்கு ஏற்றபடி படத்திற்கு படம் தனது நடிப்பில் வித்தியாசம் காட்டி வரும் கமல்ஹாசன், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 2021-ம் ஆண்டு வெளியான விக்ரம் படம் அவரது திரை வாழ்க்கையில் பெரிய வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2, தக் லைஃப், உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் காதலர்களாக நடிக்கும் பலரும் நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாக இருப்பார்கள் என்று பலரும் நினைப்பது உண்டு. அந்த வகையில், தன்னுடன் இணைந்து பல படங்களில் நடித்த நடிகர் கமல்ஹாசனை ஸ்ரீவித்யா காதலித்தார் என்ற தகவல் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலம். தற்போது ஸ்ரீவித்யா உயிருடன் இல்லாத நிலையில், கமல்ஹாசனும் இது குறித்து பொதுவெளியில் பேசியது கிடையாது என்றும் கூறப்பட்டது.

இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியின் காபி வித் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்ற, கமல்ஹாசன் பல நினைவுகளை பகிர்ந்துகொண்டார். இதில் சில புகைப்படங்களை கொடுத்து இதில் இருக்கும் ஒவ்வொரு நடிகைகள் பற்றியும் கூற வேண்டும் என்று சொல்கிறார். இதில் முதல் படமாக அபூர்வ ராகங்கள் படத்தில் கமல்ஹாசன் ஸ்ரீவித்யா இருவரும் கை பலம் பார்க்கும் விளையாட்டு போன்று வைத்திருப்பார்கள்.

இந்த படத்தை பற்றி கூறுகையில், அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்கும்போது எனக்கு வயது 19. அந்த வயதில், நான் திறமையானவன் என்று எனக்கு உணர்த்தியது ஸ்ரீவித்யா தான் என்று சொல்ல, அதை கேட்ட டிடி அன்பு தோழியா என்று கேட்க, தோழி மட்டுமல்ல காதலியும் தான் என்று கூறியுள்ளார். மேலும், அந்த படம் மூலமாக எங்களுக்கு ஏற்பட்ட நட்பு கடைசிவரை நீடித்தது. அது கல்யாணத்தில் தான் முடிய வேண்டும் அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்த ஸ்ரீவித்யா, எங்களின் காதல் விவகாரம், எங்கள் வீட்டுக்கு தெரிந்தது. ரெண்டுபேர் வீட்டுலயும் சம்மதம் தான் என்றாலும், இப்போது நாங்கள் இருவருமே முன்னணி நட்சத்திரங்களாக இருப்பதால், இப்போது திருமணம் வேண்டாம் என்று எனது அம்மா கமல்ஹாசனிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அவர் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார். சில நாட்கள் என்னிடம் பேசவே இல்லை.

அதன்பிறகு கொஞ்ச நாளில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டது. அது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதன்பிறகு இருவரும் பிரிந்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார். 1973-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற படத்தில் முதன் முதலாக இணைந்து நடித்த கமல்ஹாசன் – ஸ்ரீவித்யா ஜோடி, அடுத்து அபூர்வ ராகங்கள், அண்ணை வேளாங்கண்ணி என சில படங்களில் நடித்திருந்தனர்.

1978-ல் கமல்ஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்ட நிலையில், அதே ஆண்டு ஜார்ஜ் தாமஸ் என்பரை ஸ்ரீவித்யா திருணம் செய்துகொண்டார். ஆனால் 1980-ம் ஆண்டு கணவரை விவகாரத்து செய்த அவர் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில், 1987-ம் ஆண்டு கமல்ஹாசனுடன் புன்னகை மன்னன், நம்மவர், காதலா காதலா,உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா தனது கடைசி நாளில் கமல்ஹாசனை பார்க்க விரும்பிய நிலையில், அவரும் சென்று பார்த்து வந்துள்ளார். 2006-ம் ஆண்டு ஸ்ரீவித்யா மரணமடைந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mnm Kamal Hassan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment