கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடிகை அனுஷ்காவின் கேரோவேனை போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகுபலி-2 திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியையடுத்து, தெலுங்கு படம் ஒன்றில் அனுஷ்கா நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற இருந்தது. எனவே படப்பிடிப்புக்காக அனுஷ்கா கேராவேன் மூலமாக பொள்ளாச்சிக்கு வந்திருந்தார்.
இதனிடையே அனுஷ்காவின் கேரோவேனை பரிசோதனை செய்த போலீசார், அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததை கண்டறிந்ததனர். இதையடுத்து அனுஷ்காவின் கேராவேனை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனுஷ்காவின் கேராவேன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.