Advertisment

தனுஷ் இயக்கும் அடுத்த படம் : லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ...

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தனுஷை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கப் போவதாக அறிவித்தது இல்லையா? அந்தப் படத்தை, தனுஷே இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
dhanush

‘பவர் பாண்டி’ படத்துக்குப் பிறகு தனுஷ் இயக்கப் போகும் அடுத்த படத்தைப் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

Advertisment

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தன்னுடைய திறமைகளை நிரூபித்துவந்த தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் தன்னை சிறந்த இயக்குநர் என்றும் நிரூபித்தார். கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியான இந்தப் படத்தில், ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயா சிங், வித்யுலேகா ராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி, ராஜ்கிரணின் சின்ன வயது வேடத்தில் நடித்திருந்தார் தனுஷ். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம் தனுஷே இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியிருந்தார்.

அதன்பிறகு நடிப்பில் பிஸியான தனுஷ், மீண்டும் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தனுஷை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கப் போவதாக அறிவித்தது இல்லையா? அந்தப் படத்தை, தனுஷே இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள்.

பீரியட் ஃபிலிம் என்பதால், பட்ஜெட்டும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தப் படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸுடன் இணைந்து, தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனமும் தயாரிக்கலாம் என்கிறார்கள்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். அடுத்து, கார்த்திக் சுப்பராஜ் படத்திலும் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார் தனுஷ்.

Tamil Cinema Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment