இயக்குனர் செல்வராகவன் தனது அடுத்த படத்தை தனது சகோதரர் நடிகர் தனுஷை வைத்து இயக்க உள்ளதாக ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசியதைத் தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது உறுதியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சகோதரர்களான நடிகர் தனுஷ் - இயக்குனர் செல்வராகவன் இணைந்து உருவாக்கிய அனைத்து படங்களும் தமிழ் சினிமா உலகில் ஹிட் படங்களாக அமைந்துள்ளன.
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன்களான இயக்குனர் செல்வராகவன், நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் முன்னணி இயக்குனராகவும் உள்ளனர்.
இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி தனுஷை கதாநாயகனாக வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன? ஆகிய படங்கள் தமிழ் திரையுலகில் மிக முக்கியமான படங்களாக அமைந்தன. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களின் மனங்களில் இன்னும் நீங்கா இடம் பெற்றிருக்கிறது.
மயக்கம் என்ன படத்துக்குப் பிறகு தனுஷ் - செல்வராகவன் சகோதரர்களின் கூட்டணி அமையவில்லை. அதன் பிறகு, தனுஷ் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவனும் அதற்குப் பிறகு பல படங்களை இயக்கியுள்ளார். செல்வராகவன் கடைசியாக நடிகர் சூரியாவை வைத்து என்.ஜி.கே படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் இடையே வரவேற்பையும் பெற்றது. தனுஷ் கடைசியாக பட்டாஸ் படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.
இருப்பினும், ரசிகர்கள் செல்வராகவன் - தனுஷ் இணைந்து மீண்டும் ஒரு வெற்றிப் படம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், செல்வராகவன் அண்மையில் தனது அடுத்தப் படத்தை தனுஷை வைத்து இயக்க உள்ளதாக ஒரு கல்லூரியின் கலைநிகழ்ச்சி விழாவில் கூறியுள்ளார்.
ரசிகர்களின் இந்த நீண்ட நாள் எதிர்பார்ப்பை விரைவில் நிறைவேறும் என்பது உறுதியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.