Bigg Boss Maria Juliana will return to the medical profession as a nurse :ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மிகவும் அதிகம் பேசப்பட்டவர் ஜூலி என்ற செவிலியர். பின்னர் அவர் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருடைய வாழ்க்கை மாறியது. தொடர்ந்து படங்களில் நடிப்பதற்காக தன்னை தீவிரமாக தயார் செய்து வருகிறார். ஆரம்ப காலத்திலேயே அவர் செவிலியராக பணியாற்றி வந்தது அனைவரும் அறிந்ததே. இவர் சினிமாவில் அதிக நாட்டம் காட்டியதால் திரும்பியும் செவிலியர் பணிக்கு செல்வார் என்று யாரும் நினைக்கவில்லை.
Updated myself ???? pic.twitter.com/ADXGsC8o3a
— எம் ஜூலி (M JULEE) (@lianajohn28) April 13, 2020
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் செவிலியர் பணியை துவங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதற்காக அவர் சிறப்பு பயிற்சி ஒன்றையும் பெற்றுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் அறிவித்துள்ளார். எனவே இவர் மிக விரைவில் செவிலியர் பணிக்கு திரும்பி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிகை அலங்காரம் துவங்கி, சிரிப்பு, நடிப்பு, எக்ஸ்பிரசன் என அனைத்திற்கும் அதிகமாக இணையத்தில் கேலி செய்யப்பட்டவர்கள் என்று பட்டியலிட்டால் அதில் ஜூலியின் பெயர் நிச்சயம் இருக்கும். என்ன செய்தாலும் அவர் மீது வெறுப்பினை உமிழவே ஒரு குழு சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த நேரத்தில் ஜூலி எடுத்திருக்கும் இந்த முடிவு பாராட்டத்தக்கது. தொடர்ந்து பயணியுங்கள் ஜூலி. உங்களின் சேவை நாட்டுக்கு தேவை என்று பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.