’நாச்சியார்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜோதிகா கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஷெட்டி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் பாலா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ‘நாச்சியார்’ இந்த படத்தின் ஹீரோ ஜோதிகா என்ற கூறேலாம். படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக மிரட்டிருந்த அவரின் கதாபாத்திரம், பெருமளவில் பேசப்பட்டது. திருமண வாழ்க்கை பிறகு மீண்டும் சினிமாவில் முகம் காட்டத்தொடங்கியுள்ள ஜோதிகா இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை.
படமும் வெளியாகி வெற்றி பெற்றது. அத்துடன், கர்பிணிப்பெண்ணாக நடித்த இவனா, இவர்களுக்கு சரிக்கு சமகாக நடித்திருந்த ஜி வி பிரகாஷ் என அனைவருக்கும் பாரட்டுக்கள் குவிய தொடங்கினர். இந்நிலையில், நாச்சியார் படத்தின், தெலுங்கு உரிமையை கல்பனா கோனேறு வாங்கியுள்ளார்.
இந்த படத்தில், ஜோதிகா கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியான பாகமதி திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருந்தது. இந்நிலையில், அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், அது கண்டிப்பாக நாச்சியார் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தான் இருக்கும் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் ஜோதிகா நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நாகவல்லியாக அனுஷ்கா தான் நடித்திருந்தார். தெலுங்கிலும் அந்த சூப்பர் டூபர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து தற்போது நாச்சியார் ரோலிலும் அனுஷ்கா நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.