Advertisment

கேரளாவில் ஓய்வுபெற்ற நர்ஸ் வீட்டிற்கு திடீர் விசிட் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: என்ன காரணம்?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எங்களிடத்தில் மிகவும் இயல்பாக பழகினார். அன்பாக பேசி, போட்டோக்களும் எடுத்துக் கொண்டார் என்றார் ஷீலா.

author-image
WebDesk
New Update
Aishwarya Rajiniaktn
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள கஞ்சிக்குழி என்ற பகுதியில் ஷீலா தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சர்ப்ரைஸ் விசிட்டாக சென்றுள்ளார். 

ஆவணப் படப் எடுப்பதற்கான தகவல்களை சேகரிக்க சில நாட்களுக்கு முன்  ஐஸ்வர்யா அங்கு சென்றார். 

Advertisment

ஐஸ்வர்யா அடுத்ததாக மருத்துவர் ஒருவர் குறித்து ஆவணப் படம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற செவிலியரான ஷீலாவின் மாமியார் எல்சம்மா ஜோசப்பை பேட்டி எடுக்க அங்கு வந்திருந்தார்.

இதுகுறித்து ஷீலா கூறுகையில், ஐஸ்வர்யா வருகையால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். அவர் சர்ப்ரைஸாக வந்ததால் அவரை கண்டு நாங்கள் முதலில் ஷாக் ஆனோம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஐஸ்வர்யா மே 2 அன்று எங்கள் வீட்டிற்கு வந்தார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டாக்டர் சுரேஷ் உடன் அவர் வந்திருந்தார் என்றார்.

எல்சம்மா கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் 24 ஆண்டுகள் செவிலியராகப் பணிபுரிந்து 18 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அங்கு அவரது சேவையின் போது, ​​ மருத்துவத் துறையில் மகத்தான பங்களிப்பைச் செய்த புற்றுநோய் நிபுணர் டாக்டர் சி.பி மேத்யூவுடன் அவர் பணியாற்றி இருந்தார். ஐஸ்வர்யா மேத்யூவைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். எல்சம்மா மேத்யூவுடன்  பணியாற்றிய நிலையிலும், அவருடன் நல்ல நட்பு கொண்டிருந்ததைப் பற்றியும் ஐஸ்வர்யா தகவல் சேகரித்தார். 

ஷீலா பேசுகையில், "டாக்டர் மேத்யூ சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஐஸ்வர்யா டாக்டரைப் பற்றிய தகவல்களை என் மாமியாரிடம் கேட்டறிந்தார். கேமரா மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைக் கையாள ஐஸ்வர்யாவுடன் எட்டு அல்லது ஒன்பது பேர் இருந்தனர். மருத்துவ கல்லூரியில் இருந்து  டாக்டர்கள் உட்பட பலர் என் மாமியாரை பார்க்க அடிக்கடி வருவார்கள். சில நாட்களுக்கு முன்பு டாக்டர் சுரேஷ் வருவதாக தகவல் கூறினர். ஆனால் அவருடன் வேறு யாரும் வருவது பற்றி எந்த தகவலும் கொடுக்கல்லை என்றார். ஷீலா, எல்சம்மாவின் மகன் அனு தாமஸை திருமணம் செய்துள்ளார். 

ரசிகர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அவர்கள் ஐஸ்வர்யாவின் வருகையைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று நினைக்கிறோம். மேலும் கூறிய அவர், “ஐஸ்வர்யா எங்களிடத்தில் மிகவும் இயல்பாக பழகினார். அன்பாக பேசி, போட்டோக்களும் எடுத்துக் கொண்டார்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

    Aishwarya rajinikanth
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment