12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க பாக்சோ சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் வரைவு திட்டத்தை மத்திய அரசு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து, இன்று அவசர சட்டம் இயற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார்.
காஷ்மீர் கத்துவா மற்றும் உன்னாவ் பகுதிகளில் நடந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அரசியல் பிரமுகர்கள் பலர் உட்பட மக்களும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளது. இது குறித்து சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கருத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்குமாறு எழுந்து வரும் கருத்துகளுக்கு தான் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு இது போன்ற குற்றங்களில் மரண தண்டனையை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், குழந்தைகள் மீதான பாலியன் வன்கொடுமை வழக்கில், மரண தண்டனை அளிக்கும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதை வரசட்சுமி வரவேற்று ட்விட்டரில் பதிவு பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “பாதி தொலைவை கடந்து விட்டோம். இந்தச் சட்டத்தை குழந்தைகள் மீதான குற்றங்களில் மட்டுமின்றி, அனைத்துப் பாலியல் வன்கொடுமை குற்றங்களிலும் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
,