Advertisment

நடிகை பிரதியுஷா பலாத்காரம் செய்து கொலை : 15 ஆண்டுக்கு பின் தாய் புகார்

பிரதியுஷா தற்கொலை செய்யவில்லை. அவளை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டனர் என்று நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress pratyusha

பிரதியுஷா தற்கொலை செய்யவில்லை. அவளை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டனர் என்று நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

Advertisment

தமிழில் ‘மனுநீதி’, ‘தவசி’, ‘சவுண்ட் பார்ட்டி’ என சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர், பிரதியுஷா. நடிகை பிரதியுஷா தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2002ம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் உயிருக்குப் போராடிய காதலன் பிழைத்துவிட்டார். இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதியுஷாவின் அம்மா ஹைதராபாத்தில் பேட்டியளித்துள்ளார்.

அதில் ‘‘என் மகள் தற்கொலை செய்யவில்லை. விஷமும் குடிக்கவில்லை. அவளை நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அவளின் வாயில் விஷத்தை தடவி நாடகத்தை நடத்தியுள்ளனர். அதற்கான காயங்கள், நகக் கீரல்கள் அவளின் உடல் முழுவதும் காணப்பட்டது. ஆனால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என வழக்கை முடித்துவிடுவார்கள். குற்றவாளிகள் விடுதலையாவார்கள். ஆண்டவன் அவர்களை தண்டிப்பான். 15 வருடமாக தீர்ப்பு கிடைக்கும் என போராடிவரும் எனக்கு யாருடைய ஆதரவும் இல்லை’’ என பிரதியுஷாவின் அம்மா கதறி அழுதுள்ளார்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment