Advertisment

நாங்குநேரி சம்பவத்துக்கு இந்த இயக்குநர்கள்தான் காரணம்: ஓபனாக பேசிய எஸ்.வி. சேகர்

நாங்குநேரி சம்பவத்துக்கு இவர்கள்தான் காரணம் என நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Adjournment of judgment in SV Shekhar case

நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகர்

நாங்குநேரி சம்பவம் குறித்து நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகர், “சாதிகள் இல்லையடி பாப்பா என சொல்கிறோம். ஆனால் நாங்குநேரியில் ஒரு பள்ளி மாணவனை அவரது வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து வெட்டியுள்ளனர்.

Advertisment

சாதியை ஒழிக்க வேண்டும் எனப் பேசுகிறோம். ஆனால் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க என்ன சாதி என கேட்கிறோம்.

சின்ன வயதிலேயே குழந்தைக்கு சாதி என்றால் என்ன எனத் தெரியத் தொடங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “சினிமாவில் அதிகமாக சாதி படங்களை எடுத்ததால்தான் இந்த வினை. இதை முதலில் ஆரம்பித்து வைத்தது இயக்குநர் முத்தையாதான்.

அவர்தான் கொம்பன் என்ற படத்தை எடுத்து ஆரம்பித்த வைத்தார். பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் என பல இயக்குநர்கள் சாதி படத்தை எடுப்பதை தொடர்கிறார்கள். தனது ஜாதியை உயர்த்துவது தவறில்லை, ஆனால் அடுத்தவரின் சாதி தாழ்த்திக் காட்டுவதுதான் தவறு” என்றார்.

மேலும், “சாதி படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் அந்த வெட்டுப்பட்ட மாணவனுக்கு ரூ.10 லட்சம், 20 லட்சம் கொடுப்பார்களா? எனவும் எஸ்.வி. சேகர் கேள்வியெழுப்பினார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின மாணவர் ஒருவர் வீடு வீடு புகுந்து வெட்டப்பட்டார். தற்போது அவர் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Sv Sekar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment