Advertisment

சொகுசு கார் வழக்கு: நடிகை அமலாபால் கேரளாவில் கைதாகி விடுதலை!

விசாரணைக்கு ஆஜராகி சரணடைந்த அமலா பாலை கைது செய்த போலீசார், கேரள உயர்நீதிமன்றம் அளித்த முன்ஜாமீனை அடிப்படையாகக் கொண்டு அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சொகுசு கார் வழக்கு: நடிகை அமலாபால் கேரளாவில் கைதாகி விடுதலை!

சொகுசு கார் வழக்கில் கேரள மாநிலம் கொச்சியில் நடிகை அமலாபால் கைது செய்யப்பட்டார்.

Advertisment

மைனா, வேலையில்லா பட்டதாரி, திருட்டு பயலே 2 உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அமலா பால். இவர் மற்றும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர், புதுச்சேரி முகவரியில் போலி ஆவணங்கள் மூலம் சொகுசு கார் வாங்கிய வழக்கில், கேரள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை கொச்சினில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில், எஸ்.பி. சந்தோஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகி சரணடைந்த அமலா பாலை கைது செய்த போலீசார், கேரள உயர்நீதிமன்றம் அளித்த முன்ஜாமீனை அடிப்படையாகக் கொண்டு அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

இதேபோல், சுரேஷ் கோபி உள்ளிட்ட இரண்டு மலையாள நடிகர்களும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment