இந்திய தொலைத்தொடர்பு சந்தையில், முதன் முறையாக ரூ. 500 க்கு 4ஜி ஃபோனை அறிமுகம் செய்த ஜியோ நிறுவனத்திற்கு எதிராக பிரபல டெலிகாம் நிறுவனங்ளும் களம் இறங்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெலிகாம் சந்தையில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து, தற்போது வரை புதிய இலவச திட்டங்கள், மிகக் குறைந்த விலையில் ரீசார்ஜ் சேவைகள் என வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். சமீபத்தில் இந்நிறுவனம் புதிய முயற்சியாக ரூ. 500 க்கு 4ஜி ஸ்மார்ஃபோன்களை வழங்கி அனைவரையும் வியக்க வைத்தது. ஜியோவின் இந்த புதிய முயற்சிகளால் இந்திய சந்தையில், முன்னணி நிறுவனங்கள் பல நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், டெலிகாம் மார்கெட்டில் பிரபல முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, வோடாஃபோன் ஆகிய நிறுவனங்கள் ஜியோவிற்கு போட்டியாக ரூ. 500க்கும் கீழ் 4ஜி ஸ்மார்ஃபோன்களை அறிமுகப்படுத்தப்போவதாக தகவல் பரவி வருகிறது. பிரபல ஃபோன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, இந்த மூன்று நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில், 4ஜி ஸ்மார்ஃபோன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், ரூ.60-70 விலையில் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சேவை வழங்கும் மாதாந்திர திட்டமும் விரைவில் அறிமுகம் வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. ஏர்டெல், ஐடியா, வோடாஃபோனின் இந்த புதிய முயற்சிகள் களத்தில் இறங்கினால், ஜியோ சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் இருக்கும் அதிகளவிலான 2ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்கள் நேரடியாக 4ஜிக்குள் நுழைய வாய்ப்புகள் ஏராளமாக அதிகரித்துள்ளது. அத்துடன் ஜியோ ஃபோனில் தற்போது இயங்கி வரும் ரூ49 ரீசார்ஜ் பிளானையும் குறி வைக்கும் விதத்தில், ஏர்டெல் நிறுவனத்தினால் புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்று விரைவில் அறிமுகமாகவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.