சிறுமியை நாய் கடித்த விவகாரம் முக்கிய பிரச்சனையாக மாறி உள்ளதால், இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது: ” நாய்களை வளர்க்க லைசன்ஸ் பெற வேண்டும். அதற்கான விழிப்புணர்வு யாரிடமும் இல்லை. அதற்காக முகாம்கள் நடத்த உள்ளோம். அதிகாரிகள் நிலையில் இந்த முகாம்கள் தொடர்ந்து செயல்படும். ஆன்லைனில் பதிவு செய்யலாம். சென்னையில் முக்கிய இடங்களில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, விலங்கு நல வாரியம் மிகவும் கவனமாக உள்ளது. நிறைய பேர் நாங்கள் குழப்பத்தில் சொல்வதாக நினைக்கிறார்கள். கேரள மாநிலத்தில், இதுபோல சம்பவங்கள் சமீபத்தில் கூட நடந்து நீதிமன்றம் வரை சென்றது.
எல்லா அதிகார நிலையில் இருப்பவர்களும் இறங்கி வந்து பொருப்பை ஏற்க வேண்டும். நாம் நாய்களை குறை சொல்வது சரியில்லை. அதன் உரிமையாளர்கள் நாய்களை சரியாக பராமரிக்க வேண்டும். பாதுகாப்பாக நாய்களை வைத்துகொள்ள வேண்டும். இதுபோன்று ஒரு நிகழ்வு நடந்தாலும் கூட, நாய்களை கல்லால் அடித்து கொல்லும் நிகழ்வும் நடக்கிறது. இதனால் கருத்தட்டை மட்டுமே சரியாக இருக்கும். சென்னையில்தான் நாய்களுக்கு கருத்தடை செய்வதை முதலில் அறிமுகப்படுத்தினோம். உரிமையாளர் முறையாக நாய்யை பராமரிக்காமல் விட்டால், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாடு முட்டுவது, நாய் கடிப்பது என்பது தேசிய அளவு விவகாரம், இதை நாம் கடுமையாக மட்டும் கையாள முடியாது. மாதவரத்தில் இருந்து நேற்று ஒரு புகார் வந்தது, அந்த உரிமையாளரிடம் பேசினோம். அவர் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினார். இவர் போல மற்றவர்களும் இருக்க வேண்டும்” என்று கூறீனார்.