Advertisment

அரபி கடலில் பாகிஸ்தான் படகு; ரூ.600 கோடி போதைப் பொருள்: சுட்டுப் பிடித்த போலீஸ்!

Drugs worth Rs 600 cr seized from Pak boat | அரபிக் கடலில் சிக்கிய பாகிஸ்தான் படகில் இருந்து ரூ.600 கோடி போதைப் பொருள் சிக்கியது. இதில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Drugs worth Rs 600 cr seized from Pak boat on way to Sri Lanka 14 crew members held

Drugs worth Rs 600 cr seized from Pak boat | படகில் இருந்த ரூ.600 கோடி போதைப் பொருள் சிக்கியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Drugs worth Rs 600 cr seized from Pak boat | குஜராத்தில் உள்ள போர்பந்தர் கடற்கரையில் தமிழ்நாடு வழியாக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் படகில் இருந்து ரூ.602 கோடி மதிப்பிலான 86 கிலோ ஹெராயின் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில், படகில் இருந்த 14 பேரை இந்திய கடலோர காவல்படையினர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28,2024) கைது செய்தனர்.

Advertisment

பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, இந்தியத் தரப்பு துப்பாக்கிச் சூடு நடத்தியதில், குழு உறுப்பினர் ஒருவர் காயமடைந்தார்.

இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், “தீவிரவாத தடுப்புத் காவல்துறை கண்காணிப்பாளர் கே.கே. படேலுக்கு, பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் தாதாவான ஹாஜி அஸ்லாம் என்ற பாபு பாலோக், கராச்சி துறைமுகத்தில் இருந்து ஹெராயின் மற்றும் மெத்தாம்பேட்டமைன் போன்ற போதைப் பொருட்களை வழங்குவதற்காக 'அல்ராசா' என்ற படகை அனுப்ப உள்ளதாக தகவல் கிடைத்தது.

ஏப்ரல் 25 மற்றும் 26 இரவு போர்பந்தரில் இருந்து சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு (IMBL) அருகில். இலங்கையை தளமாகக் கொண்ட போதைப்பொருள் செயற்பாட்டாளர்களுக்கு மேலும் வழங்குவதற்காக தமிழ்நாட்டிலிருந்து ஒரு டோவுக்கு இந்த கடத்தல் பொருட்கள் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னர், குஜராத் ஏடிஎஸ் மற்றும் ஐசிஜி கூட்டுக் குழு போர்பந்தரில் இருந்து 180 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகை அடையாளம் கண்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், “இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் ஏடிஎஸ் குழு சோதனைக்காக கப்பலில் ஏற முயன்றபோது சந்தேகத்திற்குரிய படகு பணியாளர்களால் தடுக்கப்பட்டது.

தப்பியோடிய படகை நிறுத்த, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. படகில் புல்லட் காயங்கள் ஏற்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள லாஸ்பேலா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார். இதில், படகின் கேப்டன் 62 வயதான நசீர் உசேன் அசம் கான் மீது துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டது.

அவர் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது உடல்நிலை சீராக உள்ளது.

இதற்கிடையில், படகு மற்றும் அதன் பணியாளர்கள் மேலதிக விசாரணைக்காக போர்பந்தருக்கு கொண்டு வரப்பட்டனர்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான மெபெட்ரோன் மற்றும் பிற ரசாயன பொருள்கள் கைப்பற்றிய நிலையில், இந்த வாரம் இது இரண்டாவது நடவடிக்கையாகும்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Drugs worth Rs 600 cr seized from Pak boat on way to Sri Lanka; 14 crew members held

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment